Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0190

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

புறங்கூறாமை - Not Backbiting


ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

மு.வ உரை:

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?

பரிமேலழகர் உரை 
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்= ஏதிலாரைப் புறங் கூறுவார் அதற்கு அவர்குற்றம் காணுமாறுபோலப் புறங்கூறலாகிய தம்குற்றத்தையும் காணவல்லர் ஆயின்;
மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ= அவர் நிலைபேறு உடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?
பரிமேலழகர் உரை விளக்கம்
நடுவுநின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலிற் பாவம் இன்றாம் ஆகவே, வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, உயிர்க்குத் 'தீதுண்டோ' என்றும் கூறினார்.இதனால் புறங்கூற்றொழிதற்கு உபாயம் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:

புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.

Couplet:

If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?.

Explanation:

If each his own, as neighbours' faults would scan, 

 Could any evil hap to living man?.


No comments