Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0189

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

புறங்கூறாமை - Not Backbiting

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

மு.வ உரை:
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?.

பரிமேலழகர் உரை:

புறன் நோக்கிப் புன் சொல் உரைப்பான் பொறை= பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடல்பாரத்தை;

வையம் அறன் நோக்கி ஆற்றும் கொல்- நிலம் இக்கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்.

பரிமேலழகர் உரை விளக்கம்

எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன்நோக்கி ஆற்றும்கொல்' என்றார். இவை ஐந்து பாட்டானும் புறங்கூறுவார்க்கு எய்தும் குறறம் கூறப்பட்டது.


கருணாநிதி  உரை:
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை இவனைச் சுமப்பதும் அறமே என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!.

Couplet:
The world through charity supports the weight of those who reproach others observing their absence.

Explanation:
'Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours' absence watching, tales or slander tell abroad.

No comments