Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0188

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

புறங்கூறாமை - Not Backbiting


துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் 

என்னைகொல் ஏதிலார் மாட்டு.

மு.வ உரை:

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

பரிமேலழகர் உரை 
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்= தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினையுடையார்;
ஏதிலார் மாட்டு என்னை கொல்- அயலார்மாட்டுச் செவது யாதுகொல்லோ!
பரிமேலழகர் உரை விளக்கம்
தூறறுதல் பலரும் அறியப் பரப்புதல். அதனிற் கொடியது பிறிது ஒன்று காணாமையின், என்னைகொல் என்றார். செய்வது என்பது சொல்லெச்சம். என்னர்கொல் என்று பாடம் ஓதி, எவ்வியல்பினராவர் என்றுரைப்பாரும் உளர்.

கருணாநிதி  உரை:

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?

சாலமன் பாப்பையா உரை:

தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.

Couplet:

What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?.

Explanation:

Whose nature bids them faults of closest friends proclaim 

 What mercy will they show to other men's good name?.


No comments