Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0167

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

அழுக்காறாமை - Not Envying

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

மு.வ உரை:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

பரிமேலழகர் உரை

அழுக்காறு உடையானை= பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறமை உடையானை;

செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்= திருமகள் தானும் பொறாது தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும்.

பரிமேலழகர் உரை விளக்கம்

'தவ்வை', மூததவள். 'தவ்வையைக் காட்டி' என்பது, "அறிவுடை யந்தண னவளைக்காட் டென்றானோ" (கலித்தொகை, மருதம்-7) என்பது போல உருபுமயக்கம். மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை யென்று உரைப்பாரும் உளர்.

கருணாநிதி  உரை:
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

Couplet:
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

Explanation:
From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey.

No comments