குறள் - 0145
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
பிறனில் விழையாமை - Not Coveting another's Wife
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
மு.வ உரை:
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
பரிமேலழகர் உரை
எளிது என இல் இறப்பான்= எய்துதல் எளிது என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்;
விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும்= மாய்தலின்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இல்லின்கண் இறத்தல், இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.
கருணாநிதி உரை:
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
Couplet:
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.
Explanation:
'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.
No comments