Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0145

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பிறனில் விழையாமை - Not Coveting another's Wife

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

மு.வ உரை:
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

பரிமேலழகர் உரை

எளிது என இல் இறப்பான்= எய்துதல் எளிது என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான்;

விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும்= மாய்தலின்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

இல்லின்கண் இறத்தல், இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.

கருணாநிதி  உரை:
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

சாலமன் பாப்பையா உரை:
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

Couplet:
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

Explanation:
'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.

No comments