Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0116

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

நடுவு நிலைமை - Impartiality

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 

 நடுவொரீஇ அல்ல செயின்.

மு.வ உரை:

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

பரிமேலழகர் உரை 
தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின்= ஒருவன் தன்னெஞ்சம் நடுவுநிற்றலை யொழிந்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்;
யான் கெடுவல் என்பது அறிக= அந்நினைவை யான் கெடக்கடவேன் என்று உணரும் உற்பாதமாக அறிக.
பரிமேலழகர் உரை விளக்கம்
நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், செயின் என்றார்.

கருணாநிதி  உரை:

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

Couplet:

Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, I shall perish..

Explanation:

If, right deserting, heart to evil turn, 

 Let man impending ruin's sign discern!.


No comments