Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0110

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

செய்ந்நன்றியறிதல் - Gratitude

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

 செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பரிமேலழகர் உரை
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்= பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்;
செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை= ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃதில்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், குரவர்த்
தபுதலும் முதலிய பாதகங்களைச் செய்தல் (புறநானூறு-34).
இதனாற் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.

மு.வ உரை:

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

கருணாநிதி  உரை:

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

சாலமன் பாப்பையா உரை:

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

Couplet:

He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

Explanation:

Who every good have killed, may yet destruction flee; 

 Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!.

No comments