Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0096

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இனியவை கூறல் - The utterance of pleasant words

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

மு. உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

பரிமேலழகர் உரை:
நல்லவை நாடி இனிய சொலின்= பொருளாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்;
அல்லவை தேய அறம் பெருகும்= அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
தேய்தல் தன் பகையாகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடியார், 51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறனாகாது என்பதாம்.
இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

Couplet:
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

Explanation:
Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.


No comments