Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0090

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் - Hospitality

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

மு. உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

பரிமேலழகர் உரை:
அனிச்சம் மோப்பக் குழையும்= அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது;
விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும்= விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
'அனிச்சம்' ஆகுபெயர். சேய்மைக்கட் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம், இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீ்ண்டிய வழியல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்.
இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டுமென்பது கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

Couplet:
As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.

Explanation:
The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.


No comments