குறள் - 0089
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் - Hospitality
உடைமையுள் இன்மை
விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
மு.வ உரை:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.
பரிமேலழகர் உரை:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடைமை= உடைமைக்காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை;
மடவார்கண் உண்டு= அஃது அறிந்தார்மாட்டு உளதாகாது, பேதையர்மாட்டே உளதாம்.
பரிமேலழகர் விளக்கம்:
' உடைமை' பொருளுடையனாந்தன்மை. பொருளாற் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மையாக்கலின், மடமையை 'இன்மை'யாக உபசரித்தார். பேதைமையான் வருந்தோம்பலை இகழிற் பொருள் நின்றவழியும் அதனாற் பயனில்லை என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பாவழிப் படுங் குற்றம் கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.
Couplet:
That stupidity which excercises no hospitality is poverty
in the midst of wealth. It is the property of the stupid.
Explanation:
To turn from guests is penury, though worldly goods
abound;
'Tis senseless folly, only with the senseless found.

No comments