Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0085

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் - Hospitality

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி 
மிச்சில் மிசைவான் புலம்.

மு. உரை:
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) விருந்தோம்பி மிச்சி்ல் மிசைவான் புலம் = முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு;
வித்தும் இடல் வேண்டுமோ = வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
கொல் என்பது அசைநிலை. தானே விளையுமென்பது குறிப்பெச்சம்.
இவை மூன்று பாட்டானும் விருந்தோம்புவார் இம்மைக்கணெய்தும் பயன் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.

Couplet:
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain?.

Explanation:
Who first regales his guest, and then himself supplies, 
O'er all his fields, unsown, shall plenteous harvests rise.


No comments