குறள் - 0084
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் - Hospitality
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
நல்விருந்து ஓம்புவான் இல்.
மு.வ உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) செய்யாள் அகன் அமர்ந்து உறையும்= திருமகள் மனமகிழ்ந்து வாழாநிற்கும்;
முகன்அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் = முகமினியனாய்த் தக்கவிருந்தினரைப் பேணுவானதில்லின்கண்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
மனமகிழ்தற்குக் காரண்ம் தன் செல்வம் நல்வழிப்படுதல்.
தகுதி ஞானவொழுக்கங்களானுயர்தல்.
பொருள் கிளைத்தற்குக் காரணங் கூறியவாறு.
கருணாநிதி உரை:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.
Couplet:
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.
Explanation:
With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.
With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.

No comments