Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0084

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் - Hospitality

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

மு. உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) செய்யாள் அகன் அமர்ந்து உறையும்= திருமகள் மனமகிழ்ந்து வாழாநிற்கும்;
முகன்அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் = முகமினியனாய்த் தக்கவிருந்தினரைப் பேணுவானதில்லின்கண்.

பரிமேலழகர் உரை விளக்கம்:
மனமகிழ்தற்குக் காரண்ம் தன் செல்வம் நல்வழிப்படுதல்.
தகுதி ஞானவொழுக்கங்களானுயர்தல்.
பொருள் கிளைத்தற்குக் காரணங் கூறியவாறு.

கருணாநிதி  உரை:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

Couplet:
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.

Explanation:
With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.


No comments