Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0194

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பயனில சொல்லாமை - Against Vain Speaking

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்  

பண்பில்சொல் பல்லா ரகத்து.

மு.வ உரை:

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

பரிமேலழகர் உரை 
பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து= பயனொடு படாத பண்பில் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின்;
நயன் சாரா நன்மையின் நீக்கும்= அவை அவர் மாட்டு நீதியொடுபடாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'பண்பு' இனிமையும், மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள். 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர்மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப் பட்டன.

கருணாநிதி  உரை:

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

Couplet:

The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.

Explanation:

Unmeaning, worthless words, said to the multitude, 

 To none delight afford, and sever men from good.


No comments