Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0193

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பயனில சொல்லாமை - Against Vain Speaking

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

மு.வ உரை:
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

பரிமேலழகர் உரை

பயன் இல பாரித்து உரைக்கும் உரை= பயனிலவாகிய பொருள்களை ஒருவன் விரித்துரைக்கும் உரைதானே;

நயன் இலன் என்பது சொல்லும்= இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

உரையால் இவன் நயனிலன் என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி உரை சொல்லும் என்றார்.

கருணாநிதி  உரை:
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

Couplet:
That conversation in which a man utters forth useless things will say of him he is without virtue.

Explanation:
Diffusive speech of useless words proclaims
A man who never righteous wisdom gains.

No comments