Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0192

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பயனில சொல்லாமை - Against Vain Speaking

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 

நட்டார்கண் செய்தலிற் றீது.

மு.வ உரை:

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

பரிமேலழகர் உரை 
பயன் இல பல்லார்முன் சொல்லல்= பயனிலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்;
நயன் இல நல்லார்கண் செய்தலின் தீது= விருப்பமிலவாகிய செயல்களைத் தன் நட்டார்மாட்டுச் செய்தலினும் தீது.
பரிமேலழகர் உரை விளக்கம்
'விருப்பமில', வெறுப்பன. இச்சொல் அச்சயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.

கருணாநிதி  உரை:

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

Couplet:

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.

Explanation:

Words without sense, where many wise men hear, to pour 

 Than deeds to friends ungracious done offendeth more.

No comments