Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0174

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

வெஃகாமை - Not Coveting


இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற 

புன்மையில் காட்சி யவர்.

மு.வ உரை:

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.

பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
இலம் என்று வெஃகுதல் செய்யார்= யாம் வறியம் என்று கருதி அது தீர்தற் பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்;
புலம் வென்ற புன்மையில் காட்சியவர்= ஐம்புலன்களையும் வென்ற குற்றம் இல்லாத காட்சியினை உடையார்.
பரிமேலழகர் உரை விளக்கம்
வெல்லுதல் பாவநெறிக்கண் செல்லவிடாமை. புலம் வென்ற புன்மையில் காட்சியவர்க்கு வறுமை யின்மையின் வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி பொருள்களைத் திரிபின்றி உணர்தல்.

கருணாநிதி  உரை:

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

Couplet:

The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought we are destitute.

Explanation:

Men who have conquered sense, with sight from sordid vision freed, 

 Desire not other's goods, e'en in the hour of sorest need.


No comments