Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0172

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

வெஃகாமை - Not Coveting


படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 

நடுவன்மை நாணு பவர்.

மு.வ உரை:

நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.

பரிமேலழகர் உரை 
படு பயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்= பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியி்ன்கண்ணே படுஞ்செய்ல்களைச் செய்யார்;
நடுவு அன்மை நாணுபவர்= நடுவுநிலைமை யன்மையை அஞ்சுபவர்
பரிமேலழகர் உரைவிளக்கம்
நடுவு, ஒருவன் பொருட்குப் பிறன் உரியனல்லன் என்னும் நடுவு.

கருணாநிதி  உரை:

நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.

Couplet:

Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained.

Explanation:

Through lust of gain, no deeds that retribution bring, 

 Do they, who shrink with shame from every unjust thing.


No comments