Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0168

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

அழுக்காறாமை - Not Envying 

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் 

தீயுழி உய்த்து விடும்.

மு.வ உரை:

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

பரிமேலழகர் உரை
அழுக்காறு என ஒரு பாவி= அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி;
திருச் செற்றுத் தீயுழி உய்த்து விடும்= தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து, மறுமைக்கண் நரகத்தில் செலுத்தி விடும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையும் கெடுத்தற் கொடுமைபற்றி, அழுக்காற்றினைப் பாவி என்றார், கொடியானைப் பாவி என்னும் வழக்குண்மையின். இவை ஆறு பாட்டானும், அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

Couplet:

Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come).

Explanation:

Envy, embodied ill, incomparable bane, 

 Good fortune slays, and soul consigns to fiery pain.

No comments