Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0148

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பிறனில் விழையாமை - Not Coveting another's Wife

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

மு.வ உரை:

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை= பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்டகைமை;
சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு= சால்புடையார்க்கு அறனுமாம், நிரம்பிய ஒழுக்கமுமாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் உட்பகையாகிய காமம் அடக்குதற்கு அருமையின் அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல்.
செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.

கருணாநிதி  உரை:

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.

Couplet:

That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

Explanation:

Manly excellence, that looks not on another's wife,

 Is not virtue merely, 'tis full 'propriety' of life.


No comments