Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0142

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பிறனில் விழையாமை - Not Coveting another's Wife

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்.

மு.வ உரை:

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

பரிமேலழகர் உரை 
அறன் கடை நின்றாருள் எல்லாம்= காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்;
பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்= பிறன் இல்லாளைக் காதலித்து அவன் வாயிற்கண் சென்றுநின்றார் போலப் பேதையார் இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
அறத்தின் நீக்கப்பட்டமையின், 'அறன்கடை' என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச்செல்வாரும், வரைவின் மகளிரோடும், இழிகுல மகளிரோடுங் கூடி இன்பநுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலேயன்றிப் 'பிறன்கடை நின்றார்' அச்சத்தால் தாம்கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார்; எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.

கருணாநிதி  உரை:

பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்.

சாலமன் பாப்பையா உரை:

பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை.

Couplet:

Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.

Explanation:

No fools, of all that stand from virtue's pale shut out,

 Like those who longing lurk their neighbour's gate without.


No comments