Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0138

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

ஒழுக்கமுடைமை - The Possession of Decorum

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

 என்றும் இடும்பை தரும்.

மு.வ உரை:

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

பரிமேலழகர் உரை 
நல்லொழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும்= ஒருவனுக்கு நல்லொழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்;
தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்= தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'நன்றிக்கு வித்தாகும்' என்றதனால், தீயவொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும், 'இடும்பை தரும்' என்றதனால் நல்லொழுக்கம் இன்பந் தருதலும் பெற்றாம். ஒன்றுநின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின், இதனாற் பின்விளைவு கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.

Couplet:

Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.

Explanation:

'Decorum true' observed a seed of good will be;

 'Decorum's breach' will sorrow yield eternally.

No comments