குறள் - 0137
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
ஒழுக்கமுடைமை - The Possession of Decorum
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
மு.வ உரை:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
பரிமேலழகர் உரை
ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர்= எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்;
இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர்= அதனினின்று இழுக்குதலானே தாம் எய்துதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பகைபற்றி அடாப்பழி கூறியவழி அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், 'எய்தாப் பழி' எய்துவர் என்றார்.
இவை ஐந்துபாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படுங்குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.
கருணாநிதி உரை:
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
Couplet:
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.
Explanation:
'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.
No comments