Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0130

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

அடக்கமுடைமை - The Possession of Self-restraint

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

 அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

மு.வ உரை:

சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

பரிமேலழகர் உரை 
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி= மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கலவியுடையனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை;
அறம் பார்க்கும் ஆற்ிறன் நுழைந்து= அறக்கடவுள் பாராநிற்கும் அவனை அடையும்நெறியின்கண் சென்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அடங்குதல் மனம் புற்த்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். 'செவ்வி' தன்குறை கூறுதற்கேற்ற மனமொழி முகங்கள் இனியனாம் காலம். இப்பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம்.
இதனானே மனவடக்கம் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.

Couplet:

Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against anger.

Explanation:

Who learns restraint, and guards his soul from wrath,

 Virtue, a timely aid, attends his path.

No comments