Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0120

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

நடுவு நிலைமை - Impartiality

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் 

 பிறவும் தமபோல் செயின்.

மு.வ உரை:

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.

பரிமேலழகர் உரை 
பிறவும் தமபோல் பேணிச் செயின்= பிறர் பொருளையுந் தம் பொருள்போலப் பேணிச் செய்யின்;
வாணிகம் செய்வார்க்கு வாணிகம்= வாணிகஞ் செய்வார்க்கு நன்றாய வாணிகமாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பிறவுந் தமபோற் செய்தலாவது, கொள்வது மிகையுங் கொடுப்பது குறையுமாகாமல் ஒப்ப நாடிச் செய்தல்.
இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; ஏனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச்சிறந்தமையின்.

கருணாநிதி  உரை:

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

Couplet:

The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.

Explanation:

As thriving trader is the trader known, 

 Who guards another's interests as his own.


No comments