Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0118

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

நடுவு நிலைமை - Impartiality


சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் 

 கோடாமை சான்றோர்க் கணி.

மு.வ உரை:

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

பரிமேலழகர் உரை 
சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்= முன்னே தான்சமனாகநின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்குந் துலாம்போல
அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி= இலக்கணங்களான் அமைந்து ஒருபக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடையாகிய அமைதலும் ஒருபாற் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது, தொடைவிடைகளாற் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபாற் கோடாமையாவது, அவ்வுள்ளவாற்றை மறையாது பகை நொதுமல் நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.

கருணாநிதி  உரை:

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

Couplet:

To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.

Explanation:

To stand, like balance-rod that level hangs and rightly weighs, 

 With calm unbiassed equity of soul, is sages' praise.

No comments