குறள் - 0117
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
நடுவு நிலைமை - Impartiality
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
மு.வ உரை:
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.
பரிமேலழகர் உரை
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு= நடுவாக நின்று அறததின்கண்ணே தங்கினவனது வறுமையை;
கெடுவாக வையாது உலகு= வறுமையென்று கருதார் உயர்ந்தோர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
கெடுவென்பது முதனிலைத்தொழிற்பெயர். செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம்.
இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா வென்பதூஉம், கொடுதல் கேட்டிற்கு ஏதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடுஅன்று என்பதூஉம் கூறப்பட்டன.
கருணாநிதி உரை:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.
சாலமன் பாப்பையா உரை:
நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.
Couplet:
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
Explanation:
The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight.
No comments