Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0100

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

இனியவை கூறல் - The utterance of pleasant words

இனிய உளவாக இன்னாத கூறல் 

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

மு.வ உரை:

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

பரிமேலழகர் உரை
இனிய உளவாக இன்னாத கூறல்= அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறல்;
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று= இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'கூற'வென்தனால் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்துநின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. `இனிய கனிகள்' என்றது, ஒளவையு்ண்ட நெல்லிக்கனி போல அமிழ்தானவற்றை. 'இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய்போல நஞ்சானவற்றை. கடுஞ்சொற்சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்.
இவை இரண்டுபாட்டானும் இன்னாத கூறலின் குற்றங்கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

Couplet:

To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.

Explanation:

When pleasant words are easy, bitter words to use, 

 Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

No comments