Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0114

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

நடுவு நிலைமை - Impartiality

தக்கார் தகவிலர் என்பது அவரவர் 

 எச்சத்தாற் காணப் படும்.

மு.வ உரை:

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

பரிமேலழகர் உரை 
தக்கார் தகவிலர் என்பது= இவர் நடுவுநிலைமை யுடையர், இவர் நடுவு நிலைமையிலர் என்னும் விசேடம்;
அவர் அவர் எச்சத்தால் காணப்படும்= அவரவருடைய நன்மககளது உண்மையானும், இன்மையானும் அறியப்படும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
தக்கார்க்கு எச்சம் உண்டாதலும், தகவிலார்க்கு இல்லையாதலும் ஒருதலையாகலின், இருதிறததாரையும் அறிதற்கு அவை குறியாயின.
இதனால், தககாரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

Couplet:

The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.

Explanation:

Who just or unjust lived shall soon appear: 

 By each one's offspring shall the truth be clear.


No comments