குறள் - 0112
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
நடுவு நிலைமை - Impartiality
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
மு.வ உரை:
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.
கருணாநிதி உரை:
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.
Couplet:
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.
Explanation:
The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.
No comments