Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0112

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

நடுவு நிலைமை - Impartiality

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 

 எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

மு.வ உரை:

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

பரிமேலழகர் உரை
செப்பம் உடையவன் ஆக்கம்= நடுவுநிலைமையை உடையவனது செல்வம்;
சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து= பிறர் செல்வம்போல் அழிவின்றி அவன் வழியின் உள்ளார்க்கும் வலியாதலை உடைத்து.
பரிமேலழகர் உரைவிளக்கம்
விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்குந்துணையும் அவன் தனக்கும் ஏமாப்புடைத்து என்பது பெற்றாம். அறத்தொடு வருதலின் அன்னதாயிற்று. தான் இறந்து எஞ்சி நிற்பது ஆகலின், 'எச்சம்' என்றார்.

கருணாநிதி  உரை:

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

Couplet:

The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

Explanation:

The just man's wealth unwasting shall endure, 

 And to his race a lasting joy ensure.

No comments