குறள் - 0109
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் - Gratitude
கொன்றன்ன இன்னா
செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
மு.வ உரை:
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
பரிமேலழகர் உரை:
கொன்று அன்ன இன்னா செயினும்= தமக்கு முன்னொரு நன்மை செய்தவரு பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்;
அவர்செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும்= அவையெல்லாம் அவர்செய்த நன்மை ஒன்றினையும் நினைக்க இல்லையாம்.
கருணாநிதி உரை:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
Couplet:
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.
Explanation:
Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.
Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.

No comments