Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0109

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் - Gratitude

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

மு. உரை:
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

பரிமேலழகர் உரை:
கொன்று அன்ன இன்னா செயினும்= தமக்கு முன்னொரு நன்மை செய்தவரு பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்;
அவர்செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும்= அவையெல்லாம் அவர்செய்த நன்மை ஒன்றினையும் நினைக்க இல்லையாம்.

கருணாநிதி  உரை:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

Couplet:
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.

Explanation:
Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.


No comments