Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0106

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
செய்ந்நன்றியறிதல் - Gratitude

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

மு. உரை:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

பரிமேலழகர் உரை:
துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க= துன்பக்காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக;
மாசு அற்றார் கேண்மை மறவற்க= அறிவு ஒழுக்கங்களிற் குற்றம் அற்றாரது கேண்மையை மறவாது ஒழிக.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
'கேண்மை' கேளாந்தன்மை. இம்மைக்குறுதி கூறுவார் மறுமைக்குறுதியும் உடன் கூறினார்.

கருணாநிதி  உரை:
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

Couplet:
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.

Explanation:
Kindness of men of stainless soul remember ever more! 
Forsake thou never friends who were thy stay in sorrow sore!


No comments