குறள் - 0087
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் - Hospitality
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
மு.வ உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை= விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று;
விருந்தின் துணைத்துணை= அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' யென்றும், பொருள்அளவு "தான்
சிறிதாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான் சிறிதாப் போர்த்து விடும்"(நாலடியார்,
38) ஆதலின், 'இனைத்துணைத்தென்ப தொன்றில்லை` என்றுங் கூறினார்.
இதனான் இருமையும் பயத்தற்குக் காரணங் கூறப்பட்டது. (07)
கருணாநிதி உரை:
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.
Couplet:
The advantages of benevolence cannot be
measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only
measure.
Explanation:
To reckon up the fruit of kindly deeds were all
in vain;
Their worth is as the worth of guests you
entertain.

No comments