Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0086

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் - Hospitality

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

மு. உரை:
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் = தன்கட் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக்கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ணவிருப்பான்;
வானத்தவர்க்கு நல் விருந்து = மறுபிறப்பிற் றேவனாய் வானினுள்ளார்க்கு நல்விருந்தாம்.

பரிமேலழகர் உரைவிளக்கம்
வருவிருந்தென்பது இடவழுவமைதி. நல்விருந்து எய்தா விருந்து.

கருணாநிதி  உரை:
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

சாலமன் பாப்பையா உரை:
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

Couplet:
He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.

Explanation:
The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he.


No comments