Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0081

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் Hospitality

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

மு. உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் = மனைவியோடும் வனத்திற் செல்லாது இல்லின்கணிருந்து பொருள்களைப் போற்றிவாழுஞ் செய்கையெல்லாம்;
விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு = விருந்தினரைப்பேணி அவர்க்குபகாரஞ் செய்தற்பொருட்டு.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கணிருத்தலும், பொருள்செய்தலுங் காரணமாக வருந் துன்பச் செய்கைகட் கெல்லாம் பயனில்லை யென்பதாம்.

கருணாநிதி  உரை:
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

Couplet:
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

Explanation:
All household cares and course of daily life have this in view. 
Guests to receive with courtesy, and kindly acts to do.



No comments