குறள் - 0081
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
விருந்தோம்பல் – Hospitality
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற்
பொருட்டு.
மு.வ உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் = மனைவியோடும் வனத்திற் செல்லாது இல்லின்கணிருந்து பொருள்களைப் போற்றிவாழுஞ் செய்கையெல்லாம்;
விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு = விருந்தினரைப்பேணி அவர்க்குபகாரஞ் செய்தற்பொருட்டு.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கணிருத்தலும், பொருள்செய்தலுங் காரணமாக வருந் துன்பச் செய்கைகட் கெல்லாம் பயனில்லை யென்பதாம்.
கருணாநிதி உரை:
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.
Couplet:
The whole design of living in the domestic state and laying
up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
Explanation:
All household cares and course of daily life have this in
view.
Guests to receive with courtesy, and kindly acts to do.

No comments