குறள் - 0078
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை - The Possession of Love
அன்பகத் தில்லா
உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
வற்றல் மரந்தளிர்த் தற்று.
மு.வ உரை:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை:
இதன்பொருள்) அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை = மனத்தின்கணன்பி்ல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்;
வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று = வன்பாலின்கண் வற்றலாகிய மரந் தளிர்த்தாற்போலும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
கூடாதென்பதாம். வன்பால் வன்னிலம். வற்றலென்பது பால்விளங்கா வஃறிணைப்படர்க்கைப்பெயர்.
கருணாநிதி உரை:
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.
Couplet:
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
Explanation:
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
No comments