குறள் - 0077
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை - The Possession of Love
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
மு.வ உரை:
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) என்பு இலதனை வெயில்போலக் காயும் = என்பில்லாத வுடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்;
அன்பு இலதனை அறம் = அன்பில்லாதவுயிரை அறக்கடவுள்.
பரிமேலழகர் உரை
'என்பில' தென்றதனான் உடம்பென்பதூஉம், 'அன்பில'தென்றதனான் உயிரென்பதூஉம் பெற்றாம். வெறுப்பின்றி எங்குமொருதன்மைத்தாகிய
வெயிலின்முன் என்பில்லது தன்னியல்பாற் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்தாகிய அறத்தின்முன் அன்பில்லது தன்னியல்பாற் கெடுமென்பதாம். அதனைக் 'காயு'மென வெயிலறங்களின் மேலேற்றினார், அவவற்றிற்கும் அவ்வியல்புண்மையின். இவ்வாறு "அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்" (நான்மணிக்கடிகை, 84) எனப் பிறருங் கூறினார்.
கருணாநிதி உரை:
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.
Couplet:
Virtue will burn up the soul which is without
love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.
Explanation:
As suns fierce ray dries up the boneless
things,
So loveless beings virtues power to nothing
brings.
No comments