குறள் - 0075
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை - The Possession of Love
அன்புற்று அமர்ந்த
வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும்
சிறப்பு.
மு.வ உரை:
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப = அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயனென்று சொல்லுவர் அறிந்தோர்;
வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு = இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கணின்று இன்பநுகர்ந்து அதன்மேல் துறக்கத்துச் சென்றெய்தும் பேரின்பத்தினை.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
வழக்கு ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கணின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடுங் கூடி யின்புற்றார் தாஞ்செய்த வேள்வித் தொழிலாற் றேவராய் ஆண்டு மின்புறுவராகலின், 'இன்புற்றா ரெய்துஞ் சிற' ப்பென் றார். தவத்தாற் றுன்புற்றெய்துந் துறக்கவின்பத்தினை ஈண்டுமின்புற்றெய்துதல் அன்பானன்றியி்ல்லை யென்பதாம்.
கருணாநிதி உரை:
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.
Couplet:
The touch of children gives pleasure to the body, and the
hearing of their words, pleasure to the ear.
Explanation:
They say that the felicity which those who, after enjoying
the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the
result of their domestic state imbued with love.
No comments