குறள் - 0067
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்
- The wealth of children
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
மு.வ உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) தந்தை மகற்கு ஆற்றும் நன்றி = தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;
அவையத்து முந்தி இருப்பச் செயல் = கற்றாரவையின்கண் அவரினும் மிக்கிருக்குமாறு கல்வியுடையனாக்குதல்.
பரிமேலழகர் உரை:
பொருளுடையனாக்குதல் முதலாயின துன்பம் பயத்திலின் நன்மையாகாவென்பது கருத்து.
இதனால் தந்தை கடன் கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
Couplet:
The benefit which a father should confer on his
son is to give him precedence in the assembly of the learned.
Explanation:
Sire greatest boon on son confers, who makes him
meet,
In councils of the wise to fill the highest
seat.

No comments