குறள் - 0058
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
புத்தேளிர் வாழும் உலகு.
மு.வ உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) பெண்டிர் பெற்றாற் பெறின் = பெண்டிர், தம்மையெய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்;
புத்தேளிர்வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் = புத்தேளிர் வாழுமுலகின்கண் அவராற் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
'வழிபடுத' லென்பது சொல்லெச்சம்.
இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிராற் பேணப்படுவரென்பது கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.
Couplet:
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.
Explanation:
If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.
If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.
No comments