Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0058

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

மு. உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) பெண்டிர் பெற்றாற் பெறின் = பெண்டிர், தம்மையெய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்;
புத்தேளிர்வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் = புத்தேளிர் வாழுமுலகின்கண் அவராற் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
பரிமேலழகர் உரை விளக்கம்:
'வழிபடுத' லென்பது சொல்லெச்சம்.
இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிராற் பேணப்படுவரென்பது கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

Couplet:
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.

Explanation:
If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.


No comments