Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0055

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

மு. உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) தெய்வம் தொழாஅள் கொழுநற்றொழுது எழுவாள் பெய் என = பிறதெய்வந் தொழாது தன்றெய்வமாகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல;
மழை பெய்யும் = மழை பெய்யும்.

பரிமேலழகர் உரை விளக்கம்:
தெய்வந் தொழுதற்கு மனந் தெளிவது துயிலெழுங் காலத்தாகலின் 'தொழுதெழுவா' ளென்றார். தொழாநின்று என்பது 'தொழு' தெனத் திரிந்து நின்றது.தெய்வந்தா னேவல் செய்யுமென்பதாம்.

கருணாநிதி  உரை:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

சாலமன் பாப்பையா உரை:
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

Couplet:
If she, who does not worship God, but who rising worships her husband, say, let it rain, it will rain.

Explanation:
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!.


No comments