Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0047

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இல்வாழ்க்கை - Domestic Life

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

மு. உரை:
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) இல்வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் = இல்வாழ்க்கைக்கணின்று அதற்குரிய இயல்போடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவான்;
முயல்வாருள் எல்லாம் தலை = புலன்களைவிட முயல்வா ரெல்லாருள்ளும் மிக்கவன்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
முற்றத்துறந்தவர் விட்டமையின், 'முயல்வா' ரென்றது மூன்றா நிலையி னின்றாரை.
அந்நிலைதான் பலவகைப்படுதலின் 'எல்லாருள்ளு' மெனவும், முயலாதுவைத்துப் பயனெய்துதலின் தலை யெனவுங் கூறினார்.

கருணாநிதி  உரை:
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

Couplet:
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.

Explanation:
In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place.




No comments