Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0038

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Prologue 

 அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

மு.வ உரை:
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) வீழ் நாள் படாமை நன்று ஆற்றின் = செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;

அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல் = அச்செயல் அவன் யாக்கையோடு கூடுநாள் வரும் வழியை வாராமலடைக்கும் கல்லாம்.

பரிமேலழகர் உரை விளக்கம்:

ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ளதுணையும், உயிர் யாக்கையோடுங்கூடி நின்று அவ்வினைகளது இருவகைப்பயனையும் நுகருமாகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது.

குற்றங்கள் ஐந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன; இவற்றை வடநூ்லார் பஞ்சக்கிலேசம் என்பர்.

வினை இரணடாவன, நல்வினை தீவினை என்பன.

பயன் இரண்டாவன, இன்பந் துன்பம் என்பன.

இதனான் அறம் வீடுபயக்கும் என்பது கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

Couplet:
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

Explanation:
If no day passing idly, good to do each day you toil, A stone it will be to block the way of future days of moil.

No comments