Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0036

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Prologue 

 அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

மு.வ உரை:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) அன்று அறிவாம் என்னாது அறம் செய்க = யாம் இதுபொழுது இளையம் ஆகலின் இறக்குஞான்று செய்தும்எனக் கருதாது அறத்தினை நாடோறுஞ் செய்க;

அது பொன்றுங்கால் பொன்றாத் துணை = அவ்வாறு செய்த அறம் இவ்வுடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவில்லாத துணையாம்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:

மற்று என்பது அசைநிலை.

பொன்றாத்துணை என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனையுடம்பினுஞ் சேறலின்.

இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

Couplet:
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

Explanation:
Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise'; Thus, when thou diest, shalt thou find a help that never dies.

No comments