Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0035

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


 அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 

 இழுக்கா இயன்றது அறம்.


மு.வ உரை:

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) அழுக்காறு = பிறர் ஆக்கம் பொறாமையும்;
அவா = புலன்கண்மேற் செல்கின்ற அவாவும்;
வெகுளி = அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்;
இன்னாச்சொல் = அதுபற்றிவரும் கடுஞ்சொல்லும் ஆகிய;
நான்கும் இழுக்கா இயன்றது அறம் = இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது.
பரிமேலழகர் உரை விளக்கம்:
இதனான் இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாது என்பதூஉங் கொள்க.
இவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.


Couplet:

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.


Explanation:

'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path.


No comments