குறள் - 0034
அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue
அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
மு.வ உரை:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
பரிமேலழகர் உரை
(இதன் பொருள்) மனத்துக்கண் மாசு இலன் ஆதல் = அவ்வாற்றான் அறஞ்செய்வான் தன் மனத்தின்கட் குற்றம் உடையனல்லனாக;
அனைத்து அறன் = அவ்வளவே அறமாவது;
பிற ஆகுல நீர = அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறமெனப்படா, ஆரவார நீர்மைய.
பரிமேலழகர் உரை விளக்கம்:
குற்றம் தீயன சிந்தித்தல்.
பிறர் அறிதல்வேண்டிச் செய்கின்றன வாகலின், ஆகுல நீர என்றார்.
மனத்து மாசுடையனாயவழி அதன்வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதூஉம் பெறப்பட்டது.
கருணாநிதி உரை:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.
Couplet:
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.
Explanation:
Spotless be thou in mind! This only merits virtue's name; All else, mere pomp of idle sound, no real worth can claim.
No comments