Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0033

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


 அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 

 செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

மு.வ உரை:

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) ஒல்லும் வகையான் = தத்தமக்கியலுந்திறத்தான்;
அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் = அறமாகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான்எல்லாம் செய்க.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
இயலுந்திறமாவது, இல்லறம் பொருளளவிற்கேற்பவும் துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவுஞ் செய்தல்.
ஓவாமை இடைவிடாமை.
எய்தும் இடமாவன மனம் வாக்குக் காயம் என்பன.
அவற்றாற் செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும், நற்சொல்லும் நற்செயலும் எனவிவை.
இதனான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

Couplet:

As much as possible, in every way, incessantly practise virtue.

Explanation:

To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thrive.

No comments