Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0031

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


 அறன் வலியுறுத்தல் - Assertion of the Strength of Virtue

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 

 ஆக்கம் எவனோ உயிர்க்கு.

மு.வ உரை:

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) சிறப்பு ஈனும் = வீடு பேற்றையும் தரும்;
செல்வமும் ஈனும் =துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்:
உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் = ஆதலான் உயிர்கட்கு அறத்தின்மிக்க ஆக்கம் யாது?
பரிமேலழகர் உரை விளக்கம்:
எல்லாப்பேற்றினும் சிறந்தமையின் வீடு 'சிறப்பு' எனப்பட்டது.
ஆக்கந் தருவதனை 'ஆக்கம்' என்றார்.
ஆக்கம் 'மேன்மேலுயர்தல்'.
ஈண்டு 'உயிர்' என்றது மக்கள்உயிரை, சிறப்பம் செல்வமும் எய்தற்குரியது அதுவேயாகலின்.
இதனால் அறத்தின்மிக்க உறுதி இல்லையென்பது கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?.

சாலமன் பாப்பையா உரை:

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.

Couplet:

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

Explanation:

It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain?

No comments