Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0030

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Prologue 

நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

மு.வ உரை:
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

பரிமேலழகர் உரை:

(இதன்பொருள்) எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் = எல்லா உயிர்கள்மேலும் செவவிய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்;

அந்தணர் என்போர் அறவோர் = அந்தணர் என்று சொல்லப்படுவார் துறவறத்தின் நின்றவர்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:

'பூணுதல்' விரதமாகக் கோடல். அந்தணர் என்பது, அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர்ஆகலின், அஃது அவ்வருளுடையார்க்கு அன்றிச் செல்லாது என்பது கருத்து.

அவ்வாறு ஆணை உடையார் ஆயினும், உயிர்கள்மாட்டு அருளுடையார்என்பது இதனால் கூறப்பட்டது.

'தெய்வப்புலவர் திருவள்ளுவர்' இயற்றிய திருக்குறளின் அறத்துப்பால் 'நீத்தார்பெருமை' அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும்.

கருணாநிதி  உரை:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

Couplet:
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

Explanation:
Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,

No comments