Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0029

அறத்துப்பால் - Virtue


பாயிரவியல் - Prologue 


நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

 கணமேயும் காத்தல் அரிது.

மு.வ உரை:

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி = துறவு மெய்யுணர்வு அவாவின்மை முதலிய நற்குணங்களாகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி;
கணமேயும் காத்தல் அரிது = தான் உள்ளவளவு கணமேயாயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.
பரிமேலழகர் உரை விளக்கம்:
சலியாமையும் பெருமையும்பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். 'குணம்' சாதியொருமை.
அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோவழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின் 'கணமேயும்' என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின் 'காத்தலரிது' என்றும் கூறினார்.
இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

சாலமன் பாப்பையா உரை:

நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

Couplet:

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

Explanation:

The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure.

No comments