குறள் - 0029
அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue
நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
மு.வ உரை:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
கருணாநிதி உரை:
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
சாலமன் பாப்பையா உரை:
நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.
Couplet:
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.
Explanation:
The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure.
No comments