Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0022

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Prologue 

நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

மு.வ உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) துறந்தார் பெருமை துணைக் கூறின் = இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின், அளவுபடாமையான்;

வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று = இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி இத்துணையார் என அறியலு்ற்றாற் போலும்.

பரிமேலழகர் உரை விளக்கம்:

முடியாது என்பதாம். கொண்டால் என்னும் வினையெச்சம் கொண்டு எனத் திரிந்து நின்றது.


கருணாநிதி  உரை:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

Couplet:
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.

Explanation:
As counting those that from the earth have passed away, 'Tis vain attempt the might of holy men to say.

No comments